பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண்:-34/2025
நாள்:-10.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன், 70 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பெண்களுக்கு மானியம் வழங்கும் பொருட்டு, பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து 08.09.2025 முதல் 19.09.2025 வரை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள் :
• தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.(பிறப்பிடச் சான்று)
• 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்.
• ஆதார் மற்றும் பிறந்த தேதிக்கான சான்று.
• கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், என்பதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். (வட்டாச்சியரிடம் பெறுதல் வேண்டும்)
• ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமானச் சான்று வட்டாச்சியரிடம் பெறுதல் வேண்டும்)
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்.19.09.2025. மாவட்ட சமூகநல அலுவலர், எண்.88, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திண்டுக்கல்-624004 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.