மூடு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 27-09-2025 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025

செ.வெ.எண்:-106/2025

நாள்:-25.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 27-09-2025 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் பிரிவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 27-09-2025 அன்று காலை 7.00 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் கீழ்காணும் பிரிவின்படி நடைபெற உள்ளது.

 வயது வரம்பு – 13 வயதிற்குள், மாணவர்கள்-15 கி.மீ, மாணவியர்கள் – 10 கி.மீ

 வயது வரம்பு – 15 வயதிற்குள், மாணவர்கள்-20 கி.மீ, மாணவியர்கள் – 15 கி.மீ

 வயது வரம்பு -17 வயதிற்குள், மாணவர்கள்- 20 கி.மீ, மாணவியர்கள் – 15 கி.மீ

அண்ணா மிதிவண்டி போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பள்ளி தலைமையாசிரியர் / ஆசிரியையிடம் வயது சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும்.

மேலும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-, 2-ஆம் இடம் ரூ.3000/-, 3-ஆம் இடம் ரூ. 2000/- மும் மற்றும் 4 முதல் 10-ஆம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250/- வீதம் பரிசு தொகை (காசோலையாக) மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624 004, அலைபேசி எண் – 7401703504 என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.