மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பாளையத்தில் உள்ள குமாரகவுண்டன்புதூர் மற்றும் பேச்சிநாயக்கனூர் உள்ளிட்ட பகுத

வெளியிடப்பட்ட தேதி : 29/12/2025
.

செ.வெ.எண்:-70/2025

நாள்:-26.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பாளையத்தில் உள்ள குமாரகவுண்டன்புதூர் மற்றும் பேச்சிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நகரும் நியாயவிலைக் கடைகள் வாகனங்களையும், தாளையூத்து ஊராட்சிக்குட்பட்ட மாரப்பக்கவுண்டன் வலசு மற்றும் நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 பகுதி நேர நியாயவிலைக் கடைகளையும், வாகரை ஊராட்சியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தையும் மற்றும் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பாளையத்தில் உள்ள குமாரகவுண்டன்புதூர் மற்றும் பேச்சிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நகரும் நியாயவிலைக் கடைகள் வாகனங்களையும், தாளையூத்து ஊராட்சிக்குட்பட்ட மாரப்பக்கவுண்டன் வலசு மற்றும் நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 பகுதி நேர நியாயவிலைக் கடைகளையும், வாகரை ஊராட்சியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தையும் மற்றும் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும் இன்று (26.12.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் மூலம் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 51 ஆயிரம் பயனாளிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று (13.12.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றபட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. காவிரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 1 நபருக்கு தினந்தோறும் 135 லிட்டர் என்ற அடைப்படையிலும், கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 1 நபருக்கு தினந்தோறும் 55 லிட்டர் அடிப்படையிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3,200 முழுநேர, பகுதிநேர மற்றும் நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், காளாஞ்சிபட்டியில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும், தொப்பம்பட்டியில் ரூ.13.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பாளையத்தில் உள்ள குமாரகவுண்டன்புதூர் மாதத்தில் 2-வது செவ்வாய்கிழமையன்றும் மற்றும் பேச்சிநாயக்கனூரில் மாதத்தில் 3-வது புதன்கிழமையன்றும் வாகனத்தின் மூலம் வீடுதேடி குடிமைப்பொருட்கள் வழங்கும் நகரும் நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 05.01.2026-அன்று 10 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவினை தொடங்கி வைக்க உள்ளார்கள்.

பழனியில் அரசு தலைமை மருத்துவமனை ரூ.98.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்பகுதி மக்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ரூ.12.00 கோடி மதிப்பீட்டிலான பணிகளை செய்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ.7.00 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என மாண்புமிகு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றைய தினம் 2 நகரும் நியாயவிலைக் கடைகள் வாகனங்களையும் மற்றும் 2 பகுதி நேர நியாயவிலைக் கடைகளையும் பொமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, குடிமைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும், புதிய குடும்ப அட்டையினையும் பயனாளிகளுக்கு மாண்புமிகு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளின் போது, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி துணைப் பதிவாளர் திரு.செந்தில்வேல் பாண்டியன் மற்றும் சார்பதிவாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.