மூடு

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, 15.08.2024 அன்று நடைபெறும் அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 16/08/2024

செ.வெ.எண்:-38/2024

நாள்:-13.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, 15.08.2024 அன்று நடைபெறும் அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பானது, தகுதியுடைய மகளிரைக் கொண்டு குழுக்களை உருவாக்குதல், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், குழுக்களிடையே தகவல் பரிமாற்றம் செய்தல், திறன் வளர்ச்சிக்கு திட்டமிடுதல், குழுக்களை தர மதிப்பீட்டிற்கு தயார் செய்தல், உரிய காலத்தில் கடன் மதிப்பீடு செய்து, கடன் பெற்றுத் தருதல் போன்ற முக்கிய பொறுப்புகளை ஆற்றி வருகிறது.

மேலும் கூட்டமைப்பானது சுய உதவிக்குழுக்களின் கணக்குகளை பராமரிக்கவும், அவற்றை தணிக்கை செய்ய உதவுதல், குழுக்களிடையே வருவாய் பெருக்கும் செயல்பாடுகளை ஏற்படுத்துதல், குழுக்களிடையேயான பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைத்தல் போன்றவையும் கூட்டமைப்பின் பொறுப்புகளில் அடங்கும். மேலும் அரசு நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு கழகங்கள் போன்ற மகளிர் மேம்பாட்டிற்கான வெளி நிறுவனங்களோடு இணைந்து, அனைத்து சுய உதவிக்குழுக்களும், உறுப்பினர்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கூட்டமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி எதிர்வரும் 15.08.2024 அன்று இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் உரிய முறையில் கூட்டப்பொருளுடன் நடத்திட வேண்டும். கூட்டத்தில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.