மூடு

எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026- க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகள் 11.12.2025 முதல் நடைபெறவுள்ளது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் க

வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
.

செ.வெ.எண்:-21/2025

நாள்: 10.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026- க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகள் 11.12.2025 முதல் நடைபெறவுள்ளது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்களின் தகவல்.

சட்டமன்ற பொது தேர்தல்கள்-2026 தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகள் 11.12.2025 முதல் நடைபெறவுள்ளது.

மேற்படி பணியானது தினமும் காலை 9.00 மணிக்கு துவங்கி மாலை 7.00 வரையில் நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகள் மேற்கொள்வதற்கு 9 பெல் நிறுவன மின் பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பணிகள் நடைபெறுவது தொடர்பாக இன்று (10.12.2025) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது. மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.