மூடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1-பணிகள்) முதல்நிலை போட்டித்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 10/07/2024
.

செ.வெ.எண்:-10/2024

நாள்:-04.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1-பணிகள்) முதல்நிலை போட்டித்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1- பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.07.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி 1-பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு 13.07.2024 அன்று நடைபெறவுள்ளது. அதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வை கண்காணிக்க பறக்கும் படைகள், நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 9 இடங்களில் 11 தேர்வு மையங்களில் 3100 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 3 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படை, 11 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 6 இடங்களில் 11 தேர்வு மையங்களில் 3100 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 3 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படை, 11 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகமொத்தம் 15 இடங்களில் 22 தேர்வு மையங்களில் 6200 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக மொத்தம் 6 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, 23 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் தேர்விற்கு முன்னரும், தேர்வு நாளன்றும் விழிப்புடன் செயல்பட்டு, அனைத்து பணிகளையும் தொய்வின்றி மேற்கொண்டு, தேர்வு முடியும் வரை அனைத்து பணிகளையும் கண்காணித்தும், ஒருங்கிணைத்தும், தேர்வு சிறப்பான முறையில் நடைபெற ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.கோட்டைக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ் உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.