மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டவைகளை மீள பூர்த்தி செய்து பெறுவது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
.

செ.வெ.எண்:-46/2025

நாள்: 11.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டவைகளை மீள பூர்த்தி செய்து பெறுவது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர்களால் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மீளப்பெறும் பணிகள் 11.11.2025 முதல் நடைபெற்று வருகின்றது. இப்பணி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் BLO App தொடர்பான செயல்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், அரசு சார்ந்த தன்னார்வலர்கள் (Volunteers) மற்றும் பிற துறை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.