மூடு

திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைப்பிரிவினருடன் 26.07.2024 அன்று கலந்துரையாடல் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 16/07/2024

செ.வெ.எண்:-38/2024

நாள்:-14.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைப்பிரிவினருடன் 26.07.2024 அன்று கலந்துரையாடல் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த MRC படைப்பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர் நாரிஸ்களுக்கு அவர்களின் குறைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் MRC படைப்பிரிவினை சார்ந்த சுற்றுப்பயண குழுவினரால் 26.07.2024 அன்று காலை 11.00 மணியளவில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த MRC படைப்பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர் நாரிஸ்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.