மூடு

குடியரசு தினம் – மது விற்பனைக்கு தடை.

வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026

செ.வெ.எண்:-25/2026

நாள்:-09.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல். 1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல். 11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 16.01.2026 (வெள்ளி கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 (திங்கள் கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.