மூடு

“பத்ம விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 16/07/2024

செ.வெ.எண்:-37/2024

நாள்:-14.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

“பத்ம விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பத்மவிருதுக்கு தகுதியானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கலை இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத்துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2025-ஆம் தேதியன்று குடியரசு தினவிழாவில் மாநில அளவில் பத்ம விருது வழங்கப்பட உள்ளது. பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்களிடமிருந்து 15.09.2024-ஆம் தேதிக்குள் ராஷ்டிரிய புரஷ்கார் இணைய முகப்பில் (http://awards.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விண்ணப்பித்த விபரம் கொண்ட உரிய கருத்துருவினை அறை எண்: 88 மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.