மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண
செ.வெ.எண்:-23/2025
நாள்:11.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு வட்டம், அடியனூத்து ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு வட்டம், அடியனூத்து ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;-
இக்கிராமசபைக் கூட்டத்தில், கிராம மக்களின் மூன்று அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல். இழிவுப்படுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பெயரை மாற்றுதல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரவு செலவு மற்றும பணி முன்னேற்ற அறிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி முன்னேற்ற அறிக்கை, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரும் இல்லை, தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நிலை ஆய்வு, கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம், சபாசார் செயலி செயல்பாடுகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வர் திட்டம், தாயுமானவர் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம், அன்பு கரங்கள் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு சாதனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அடியனூத்து ஊராட்சியில் இதற்கு முன்னர் பல்வேறு கிராம சபைக்கூட்டத்தில் பங்கு பெற்று இருந்திருப்பீர்கள். அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும், அவர்களுக்கான அங்கீகாரத்தினையும் கொடுக்க முடியும். குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை தெருக்களுக்கு வைத்திருப்பார்கள். இப்பெயர்களை கிராம சபை ஒப்புதலுடன் மாற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். கிராமப்புற பகுதியில் மகளிர் உரிமைத்தொகை ஏற்கனவே அதிகமானவர்கள் வாங்கி இருப்பீர்கள். விடுபட்டவர்களுக்கு வழங்குவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமில் மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது வருவாய் துறையின் மூலமாக பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் 12-ஆம் வகுப்பு முடித்த பின்பு கல்லூரி படிப்பிற்கு ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஆண்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மூலம் அவர்களுக்கு ஆயத்த பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் படித்த இளைஞர்கள் இருந்தால் அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி அலுவலகத்தினை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உண்டு உறைவிடத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் ரூ.1.00 இலட்சம் மதிப்பிலான வங்கி கடன்கள் கடந்த 4 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ரூ.950 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ரூ.1113 கோடி மதிபிலான வங்கி கடனுதவி வழங்கப்படவுள்ளது. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னார் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் திட்டத்தின் சார்பில் 5,478 மகளிருக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தாயுமானவர் திட்டத்தில் மகளிர் தொழில் தொடங்குவதற்கும், தொழிலை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் 225 குழந்தைகள் பயன்பெற்ற வருகின்றனர்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் அதிகப்படியான நியாயவிலைக்கடைகள் பிரிக்கபட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் மாவாட்ட நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
அடியனூத்து ஊராட்சி யாகப்பன்பட்டி மண் சாலைகளை சிமெண்ட் சாலையாக மாற்றுதல், சிறுவர் பூங்கா, பகவதி நகர், ஜெ.பி நகர், மொட்டணம்பட்டி, வாழக்காய்பட்டி, மெயின் ரோடு, ஏ.வெள்ளோடு மெயின்நோடு மற்றும் புதிய 125 தெரு விளக்கு அமைக்கும் பணிகள், உரிமிக்காரன்பட்டியில் நாடக மேடை முதல் கழிவு நீர் அமைக்கவும் ஆகிய பணிகள் மேற்கொள்ளவும், கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.
தொடர்ந்து, பொதுமக்கள் சாலை வசதி, வாய்க்கால் வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து புகார் மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு, சமத்துவபுரத்தில் ஆய்வு செய்து அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இக்கிராமசபைக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன்,இ.ஆ.ப, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ந.சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன், சமூக நல அலுவலர் திருமதி கரோலின், குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு.சத்திய நாராயணன், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மகுடபதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.