மூடு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் TNPSC Group- II/IIA (Mains) முதன்மைத் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2025

செ.வெ.எண்:-54/2025

நாள்: 13.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் TNPSC Group- II/IIA (Mains) முதன்மைத் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண்:11/2025- ன் படி TNPSC Group-II/IIA – போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு 15.07.2025- அன்று வெளியிடப்பட்டுள்ளது, அதனைத்தொடர்ந்து TNPSC Group- II/IIA (Mains) முதன்மைத் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் விரைவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே, போட்டித் தேர்விற்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.