மூடு

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் Ph.D படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2025

செ.வெ.எண்:-75/2025

நாள்:-17.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் Ph.D படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வழிகாட்டு நெறிமுறைகள்:-

1.முழுநேர / பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

2. வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை.

3. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர / பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.

4. ரூ.1.00/- இலட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் இத்தொகை வழங்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.

5.ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை / தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID), ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், முழுநேர / பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிடச் சான்று (Nativity Certificate) முதலியவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0451-2460099 என்ற மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.