மூடு

லக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 25.09.2024 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

செ.வெ.எண்:-74/2024

நாள்: 26.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

லக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 25.09.2024 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், செட்டிநாயக்கன்பட்டி கிராமம், ஆர்.எம்.காலனி 7-வது கிராஸ் என்ற முகவரியில் இயங்கி வந்த லக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், உசிலம்பட்டி கிராமம்(புல எண் 163/1பி-குறும மதிப்பு ரூ.1,81,44,000), அம்மாபட்டி கிராமம்(புல எண் 370/1ஏ-குறும மதிப்பு ரூ.1,27,694, புல எண் 371/1-குறும மதிப்பு ரூ.10,25,480) ஆகிய இடங்களில் உள்ள நிலம், கட்டடங்கள், மரங்கள் மற்றும் கிணறு முதலானவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1997-ன் கீழ் தகுதிபெற்ற அலுவலர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர், அவர்களால் 25.09.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் வேடசந்துார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த சொத்துக்கள் மற்றும் ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில்(www.dindigul.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், இதுதொடர்பான விபரங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படி அசையா சொத்தினை நிலையில் உள்ள விதத்தில் உள்ளவாறே ஏலம் விடப்படும், என திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.