மூடு

விபத்தில் உயிரிழந்த நிலக்கோட்டை வட்டம், பச்சமலையன்கோட்டை கிராமம் உட்கடை சி.கூத்தம்பட்டி சேர்ந்த திரு. ஆனந்த போதிகுமரன் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்க

வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025
.

செ.வெ.எண்:-53/2025

நாள்:-14.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

விபத்தில் உயிரிழந்த நிலக்கோட்டை வட்டம், பச்சமலையன்கோட்டை கிராமம் உட்கடை சி.கூத்தம்பட்டி சேர்ந்த திரு. ஆனந்த போதிகுமரன் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சமலையன்கோட்டை கிராமம் உட்கடை சி.கூத்தம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த போதிகுமரன் (வயது 16) என்பவர் விபத்தின் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக பச்சமலையன்கோட்டை கிராமம் உட்க்கடை சி.கூத்தம்பட்டியில் உள்ள மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. சாலை விபத்தில் ஒருவர் மரணம் அடைந்த துயரச் சூழலில் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் அவருடைய குடும்பத்தினரின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சமலையன்கோட்டை கிராமம் உட்கடை சி.கூத்தம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் பாப்பாத்தி தம்பதியரின் மகன் ஆனந்த போதிகுமரன் (வயது 16) பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் கடந்த 10.09.2025 அன்று சாலை விபத்து ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் ஆனந்த போதி குமரன் என்பவரது அரசு ராஜாஜி மருந்துவமனையில் இறந்தார். அதையடுத்து அன்னாரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.

பின்னர், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சமலையன்கோட்டை கிராமம் உட்க்கடை சி.கூத்தம்பட்டியில் உள்ள மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் ஆனந்த போதிகுமரன் உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மதியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், நிலக்கோட்டை வட்டாட்சியர் திருமதி விஜயலட்சுமி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.