மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.07.2024 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024

செ.வெ.எண்:-31/2024

நாள்:-12.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.07.2024 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் 19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடைபராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கிகள் மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த, கோரிக்கைக்களுக்கு தீர்வுகாணுமாறுமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.