10, 11 and 12 Govt Public Exam
செ.வெ.எண்:-74/2025
நாள்:-24.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு தொடர்பாக பிற துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு தொடர்பாக பிற துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகள் 03.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகள் 03.03.2025 அன்று தொடங்கி 25.03.2025 வரையிலும், மேல்நிலை முதலாமாண்டு தேர்வுகள் 05.03.2025 அன்று 27.03.2025 வரையிலும், 10-ஆம் வகுப்பு தேர்வுகள் 28.03.2025 அன்று தொடங்கி 15.04.2025 வரையிலும் நடைபெறவுள்ளது.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகள் 86 தேர்வு மையங்களிலும், தனித்தேர்வுகளுக்காக தனியே 4 தேர்வு மையங்களிலும், 10-ஆம் வகுப்பு தேர்வு 112 மையங்களிலும் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வினை 216 பள்ளிகளில் பயிலும் 10,361 மாணவர்கள் மற்றும் 11,456 மாணவிகள் என மொத்தம் 21,817 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்கள் 273 பேர் தேர்வு எழுதவுள்ளனர். மேல்நிலை முதலாமாண்டு தேர்வினை 217 பள்ளிகளில் பயிலும் 9,789 மாணவர்கள் மற்றும் 12,427 மாணவிகள் என மொத்தம் 22,216 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்கள் 181 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 348 பள்ளிகளில் பயிலும் 12,599 மாணவர்கள் மற்றும் 12,523 மாணவிகள் என மொத்தம் 25,122 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்கள் 655 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
இத்தேர்வுகளை கண்காணிக்க நிலையான படையினரும், பறக்கும் படையினரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனார்.
அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் விடைத்தாள் சேகரிப்பு மையம் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவலர் நியமித்து பாதுகாப்பு அளிக்கவும், தேர்வு நாட்களில் வினாத்தாள் பாதுகாப்பாக உரிய தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வழித்தட அலுவலருடன் இணைந்து பணியாற்ற காவலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு நேரத்தில் தடையின்றி மின் விநியோகம் இருப்பதை மின் வாரிய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையம், விடைத்தாள் சேகரிப்பு மையம் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தேர்வு முடியும் வரை பார்வையிட்டு பாதுகாப்பாக இருப்பதை தீயணைப்பு துறையினர் உறுதி செய்திட வேண்டும்.
அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான குடிநீர் வசதி. கழிப்பறைத் தூய்மை, தேர்வு மையப்பள்ளியின் சுற்றுப்புற தூய்மை போன்ற வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்திட வேண்டும். தேர்வு நடைபெறும் நாட்களில் அனைத்து தேர்வு மைய வழித்தடங்களிலும் தேர்வு நேரத்திற்கு உகந்தவாறு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் கட்டட உறுதித்தன்மை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதாக தேர்வறைக்கு சென்றுவர சாய்தள வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
தேர்வு நாட்களில் அனைத்து தேர்வு மையங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஏதேனும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படின் தக்க முதல் உதவி மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், மருத்துவ உதவி சார்ந்த கைபேசி எண்களை தேர்வு மையங்களுக்கு வழங்கிட வேண்டும்.
தேர்வு சார்பான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அனைத்து தேர்வுகளும் முடியும் வரை தேர்வுப்பணிகளை கண்காணித்து தேர்வு நன்முறையில் நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி உஷா மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.