Close

Court Tree Plantation

Publish Date : 13/06/2024
.

செ.வெ.எண்:-02/2024

நாள்:-05.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழா, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி ஏ.முத்துசாராதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழா, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி ஏ.முத்துசாராதா அவர்கள் தலைமையில் இன்று(05.06.2024) நடைபெற்றது.

விழாவில், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி ஏ.முத்துசாராதா அவர்கள், மாற்று சமரச தீர்வு மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்களின் வழிகாட்டுதலின்படி உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்படுகிறது. இயற்கை நமக்கு தீங்கு விளைவிக்கவில்லை, நாம் தான் இயற்கையை பாதுகாக்கத் தவறிவிட்டோம். இயற்கை இனங்களை அழித்துவிட்டு தினங்களை கொண்டாடி வருகிறோம். இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என தெரிவித்தார்.

இவ்விழாவில், கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. ஏ.கே.மெகபூப் அலிகான், குடும்ப நல நீதிபதி திரு.ஜி.விஜயகுமார், எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிபதி திரு.ஏ.முரளிதரன், போக்சோ(POCSO) சிறப்பு நீதிபதி திரு.பி.வேல்முருகன், மகிளா நீதிபதி திரு.ஜி.சரண், முதன்மை சார்பு நீதிபதி திருமதி.எஸ்.மீனாட்சி, கூடுதல் சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு திருமதி வி.தீபா, கூடுதல் சார்பு நீதிபதி திரு.எஸ்.சோமசுந்தரம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு.ஜி.அருண்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு.பி.ரெங்கராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் திருமதி வி.பிரியா, திருமதி ஜி.ஆனந்தி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் சௌமியா மேத்யு, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.