Close

Kalpana Chawla Award

Publish Date : 16/07/2024

செ.வெ.எண்:-36/2024

நாள்:-13.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

“கல்பனா சாவ்லா விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஆண்களுக்கு நிகரான தைரியமான, வீரதீரச் செயல் புரிந்தும், பெண்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், துணிச்சலான சவால் நிறைந்த செயல்களை செய்தமைக்காக “கல்பனா சாவ்லா விருது” 2024ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. தகுதியான நபர்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் 15.07.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விருதுக்காக மேற்காணும் இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள், தங்களது வீரதீரச் செயல்கள், நிழற்படங்கள், விருதுகள் குறித்த உரிய விபரங்கள் கொண்ட கருத்துருக்களை அறை எண்.88, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.