Close

Grama saba meeting

Publish Date : 16/08/2024

செ.வெ.எண்:-37/2024

நாள்:-13.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2024 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று (15.08.2024) முற்பகல் 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம சபைக் கூட்டங்களில், கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் 01.04.2023 முதல் 31.03.2024 வரையிலான 2023-2024-ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருட்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து 306 கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்து, பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.