Fisheries and Fishermen Welfare
செ.வெ.எண்:-86/2025
நாள்:-23.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மீன் வளர்க்கும் விவசாயிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், மீன் விற்பனையாளர் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நபர்கள், மீன் சார்ந்த தொழில் செய்யும் அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர் நலவாரியத்தில் புதுப்பிக்காமல் உள்ள பழைய நலவாரிய உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்பட நகல்-2 மற்றும் பழைய நலவாரிய அடையாள அட்டை(if Available) ஆகியவற்றுடன் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரியை அணுகி மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், ஜுன்-30 ஆம் தேதி வரை மீனவர் நலவாரியத்தில் புதுப்பித்துக்கொள்ளும் பழைய நலவாரிய உறுப்பினர்கள் மட்டுமே மீனவர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய இயலும்.
மேலும் விவரங்களுக்கு மீன் வள ஆய்வாளர்கள் கைபேசி எண்: பழனி- 7598236815, ஒட்டன்சத்திரம்- 9384824386, நிலக்கோட்டை -6374826415, வேடசந்தூர்- 9751664565, திண்டுக்கல்- 9994687689 வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.