Close

Monday Grievance Day Petition

Publish Date : 17/09/2025
.

செ.வெ.எண்:-56/2025

நாள்:-15.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.09.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 453 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,800/- வீதம் மொத்தம் ரூ.34,000/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் (17.09.2025) அன்று பிறந்த நாளை முன்னிட்டு 04.09.2025 அன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற வடமதுரை அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி தி.காவ்யா அவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, தாழையூத்து அரசு மேனிலைப்பள்ளி மாணவர் மு.குகன் அவர்களுக்கு இரண்டாம் பரிசு ரூ.3000/-, இரா.புதுக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ரா.கவிதா அவர்களுக்கு மூன்றாம் பரிசு ரூ.2000/-, விருவீடு அரசு மாதிரி மேனிலைப்பள்ளி மாணவி ஜெ.ஜெயபாரதி அவர்களுக்கு சிறப்பு பரிசு-1 ரூ.2000/-, வேடசந்தூர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி ந.கனகஸ்ரீநித்யா அவர்களுக்கு சிறப்பு பரிசு-2 ரூ.2000/-மும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சிப் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி ப.சாதனா அவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மாலை நேரக் கல்லூரி மாணவி ஜோ.கேத்ரின் மெர்லின அவர்களுக்கு இரண்டாம் பரிசு ரூ.3000/-, திண்டுக்கல் ஜி.டி.என் கலைக் கல்லூரி மாணவி அ.சுஹாசினி அவர்களுக்கு மூன்றாம் பரிசு ரூ.2000/- ஆகிய பரிசு தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் (15.09.2025) இன்று பிறந்த நாளை முன்னிட்டு 03.09.2025 அன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற கம்பிளியம்பட்டி அரசு மேனிலைப்பள்ளி மாணவி சு.பவித்ரா அவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, பழனி சண்முகாபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி தி.அன்புமதி அவர்களுக்கு இரண்டாம் பரிசு ரூ.3000/-, திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி மாணவர் செ.மனோஜ் அவர்களுக்கு மூன்றாம் பரிசு ரூ.2000/-, அழகபுரி அரசு மேனிலைப்பள்ளி மாணவி ம.நதியா அவர்களுக்கு சிறப்பு பரிசு-1 ரூ.2000/-, இரா.வெள்ளோடு அரசு மேனிலைப்பள்ளி மாணவி ச.ஸ்ரீமதி அவர்களுக்கு சிறப்பு பரிசு-2 ரூ.2000/-, மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சிப் போட்டியில் வெற்றி பெற்ற எம்.வி முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி வெ.மோகனப்பிரியா அவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, எஸ்.எஸ்.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவி ப.விமல் சாஸ்தா அவர்களுக்கு இரண்டாம் பரிசு ரூ.3000/-, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஆ.கிருத்திகா அவர்களுக்கு மூன்றாம் பரிசு ரூ.2000/- ஆகிய பரிசு தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.ம.சுந்தரமகாலிங்கம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ப.ராஜகுரு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.