Close

ELECTION – ENUMARAITION FORMS – (NILAKKOTTAI)

Publish Date : 06/11/2025
.

செ.வெ.எண்:-21/2025

நாள்:-05.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம்,மெட்டூர் ஆகிய பகுதிகளுக்கும், அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வீடுதோறும் சென்று வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம், மெட்டூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை இன்று (05.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வீடுதோறும் சென்று வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணி 04.11.2025-அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வருகின்ற 04.12.2025-அன்று வரை வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர்களால் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, கணக்கெடுப்பு படிவம் வழங்குவது குறித்து BLO App தொடர்பான செயல்முறை பயிற்சி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணியினை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், அரசு சார்ந்த தன்னார்வலர்கள் (Volunteers) மற்றும் தேர்தல் பிரிவில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக தங்களது வீடு தேடி வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 68,529 கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) வழங்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் திட்டம் சுயஉதவிக்குழுவினைச் சேர்ந்த தன்னார்வலர்களை கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., நிலக்கோட்டை வாக்காளர் பதிவு அலுவலர் திரு.க.சுகுமார், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.