Close

The Hon’ble CM (ANBU SOLAI)

Publish Date : 12/11/2025
.

செ.வெ.எண்:-37/2025

நாள்:-10.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சிராப்பள்ளியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் ”அன்புச்சோலை” திட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாக இன்று (10.11.2025) தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி, இடும்பன் நகர், மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சிராப்பள்ளியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் ”அன்புச்சோலை” திட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாக இன்று (10.11.2025) தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி, இடும்பன் நகர், மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக குழந்தைகள், மகளிர், கல்வி பயிலும் மாணவ, மாணவியர், திருநங்கைகள் மற்றும் முதியோர் அனைவரையும் பேணிகாக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சட்டங்கள் இத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாக இல்லங்கள். நடமாடும் மருத்துவ அலகுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. முதியவர்கள் அமைதியான, கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதை உறுதிசெய்து, அத்தியாவசிய வசதிகளை வழங்குவதே இத்திட்டங்களின் நோக்கம் ஆகும்.

தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஒரு மாநகராட்சியில் இரண்டு அன்புச் சோலைகள் வீதம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்பூர், ஈரோடு. தூத்துக்குடி. வேலூர். தஞ்சாவூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் 20 அன்புச் சோலைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 2 தொழில்துறை மாவட்டங்களான இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி. பெருநகர மாநகராட்சியான சென்னையில் தண்டையார்பேட்டை. சோழிங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் “அன்புச்சோலை” மையங்கள் தொடங்கப்பட்டு, இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy), யோகா, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நூலகங்கள் போன்றவை வழங்கப்படவுள்ளன. முதியோருக்கு வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சேவைகள். பொழுதுபோக்கு, திறன் மேம்பாடு நிகழ்வுகள் மூலம் மனமும், உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல், முதியோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, சமூக உறவுகளை வலுப்படுத்துதல், ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு. அவர்களது மூத்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு அன்புச் சோலை மையங்கள் செயல்படும்.

அன்புச்சோலை திட்டமானது. முதியோர்களை போற்றும் தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதோடு. முதியோர்களின் பாதுகாப்பையும், நன்முறையில் பராமரிப்பதையும் உறுதி செய்வதால் அவர்களது குடும்பத்தினருக்கு அமைதியை ஏற்படுத்துகிறது. இதனால் முழுமையான நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவையை குறைத்தும், குடும்ப பிணைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்கள் தங்கள் வீட்டிலுள்ள முதியோர்களை பகல் நேரங்களில் பராமரிக்க இயலாததால் வேலைக்கு செல்ல இயலாத நிலையுள்ளது. எனவே. வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவும். வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்களுக்காகவும். அவர்களது வீட்டு முதியவர்களுக்கு தனிமையில்லாமல் நேரத்தை சிறந்த முறையில் செலவு செய்து. மகிழ்வாக வாழ வழிவகை செய்யும் நோக்கத்தோடும் இம்மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், இயக்குநர் (பல்நோக்கு சமூக பணி மையம்) எஸ்.ஜான் நெப்போலியன், இயக்குநர் (மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை) திரு.முரளி, சமூக நல அலுவலர் திருமதி சா.காலின்செல்வராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.