Close

Election

Publish Date : 15/11/2025

செ.வெ.எண்:-56/2025

நாள்: 14.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்களின் தகவல்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 93% வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் (SVEEP) கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எழிமைபடுத்தும் வகையிலும் எதிர் வரும் 15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025 (ஞாயிறுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் (SIR) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மேற்படி முகாமில் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஐயப்பாடுகளை களைந்திடவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் பணி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட (SIR) சிறப்பு முகாமினை வாக்காளர்கள் நன்கு பயன்படுத்தி தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.