Close

Differentially Abled Person – Grievance Day Petition

Publish Date : 02/07/2024

செ.வெ.எண்: 54/2024

நாள்: 25.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் வருவாய் கோட்டம், ஆத்துார் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் ஆய்வுக் கூட்டம் 29.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டம், ஆத்துார் வட்டம், ஆத்துார் கிராமத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் ஆய்வுக்கூட்டம் 29.06.2024 அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஆத்துார் வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.