Close

District AD Welfare Office – Teacher Recruitment – Notification

Publish Date : 11/07/2024

செ.வெ.எண்:-15/2024

நாள்:-05.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில், தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, நல்லுார்காடுவளவு பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம், தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது.

இந்த தற்காலிக தொகுப்பூதிய இடைநிலை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு மூலமாக தேர்வு செய்யப்படுவார்.

தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் தகுதிகள் பெற்றுள்ள பணிநாடுநர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிந்தவர்கள் அல்லது தன்னார்வலர்கள் இல்லையெனில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தற்காலிக பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் உரிய கல்விச்சான்றுகளுடன் விண்ணப்பங்களை, திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 08.07.2024-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.