Close

Election – MCC Meeting

Publish Date : 19/03/2024
.

செ.வெ.எண்:-45/2024

நாள்:-16.03.2024

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-க்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்து. தேர்தல் நடத்தை விதிகள் இன்று(16.03.2024) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தைவிதிகள் அமல்படுத்துவது குறித்து இன்று(16.03.2024) அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை அகற்றிட வேண்டும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவைற்றை மறைக்க வேண்டும். அரசு கட்டடங்களில் இடம்பெற்றுள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விளம்பர பலகைகள் மறைக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை பூட்டி, பொதுப்பணித்துறை வசம் சாவி ஒப்படைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரியத்தலைவர்கள் ஆகியோர் பயன்படுத்தும் அரசு வாகனங்களை திரும்ப பெற வேண்டும். பறக்கும்படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் அவர்களுக்குரிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும். அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சியனர் தொடர்பான சின்னங்கள், வாசகங்களை மறைத்திட வேண்டும். அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான கட்டடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழித்திட வேண்டும். விளம்பர பதாகைகளை அகற்றிட வேண்டும்.

தனிநபர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்திட வேண்டும். அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைத்திட வேண்டும். அரசு விருந்தினர் மாளிகைகளில் எந்த ஒரு அரசியல் கட்யினினரும் அனுமதிக்கப்பட கூடாது. தினசரி மது வகைகள் விற்பனை தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.