Close

Ex-servicemen welfare – (SPL Grievance Day Petition)

Publish Date : 18/09/2025

செ.வெ.எண்:-70/2025

நாள்:-17.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 24.09.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 24.09.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டைப் பிரதிகளில் முற்பகல் 9.00 மணிமுதல் 10.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூட்டத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.