Close

Exwel job

Publish Date : 18/08/2025

செ.வெ.எண்:-64/2025

நாள்:-14.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

கோயில் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகர், தாடிக்கொம்பு, நத்தம், வடமதுரை, பழநி, ஆயக்குடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 43 கோயில்களில் பாதுகாப்பு பணியிடங்களுக்கு(Temple Protection Force) தகுதியான முன்னாள் படைவீரர்கள் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோயில் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள 62 வயதிற்குட்பட்ட உடல் திடகாத்திரம், தகுதியும் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்கள் விருப்ப விண்ணப்பத்தினை அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.