Close

Exwel Temple Protection Force – TPF – job – Notification

Publish Date : 13/09/2024

செ.வெ.எண்:-32/2024

நாள்:-12.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

கோவில் பாதுகாப்புப் பணிக்கு காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் ஒப்பந்த ஊதிய முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகர், தாடிக்கொம்பு, நத்தம், வடமதுரை, பழநி, ஆயக்குடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பட்டிவீரன்பட்டி மற்றும் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பாதுகாப்புப் பணிக்கு (Temple Protection Force) தகுதியான முன்னாள் படைவீரர்கள் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவில் பாதுகாப்பு பணிக்கு 62 வயதிற்குட்பட்ட உடல் திடகாத்திரமும், தகுதியும் உள்ள விருப்பம் தெரிவிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தங்கள் அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அணுகி பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 0451-2460086 என்ற தொலைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.