Close

HON’BLE DEPUTY CM AND TH FOOD MINISTER NEWS. (FREE CYCLE)

Publish Date : 17/11/2025
.

செ.வெ.எண்:-60/2025

நாள்:-14.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2025-2026 தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் வட்டம், கே.ஆர்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2025-2026 தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் வட்டம், கே.ஆர்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு பள்ளிக்லவித் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். பல்வேறு துறைகள் இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் மாணவர்களுக்கு ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்கள். படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தொடர்ந்து, தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

தமிழ்நாடு அரசின் மூலம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருடந்தோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு வழங்கபடும் மிதிவண்டியின் விலை ரூ.4,375/- என்ற மதிப்பீட்டிலும், ஒரு மாணவியருக்கு ஒரு மாணவனுக்கு வழங்கபடும் மிதிவண்டியின் விலை ரூ.4,250/- என்ற மதிப்பீட்டிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டு 7,725 மாணவர்களுக்கும், 7,361 மாணவிர்களுக்கும் என 15,086 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.67/- கோடி மதிப்பீட்டிலும், 2022-2023-ஆம் ஆண்டு 3,275 மாணவர்களுக்கும், 6,054 மாணவியர்களுக்கும் என 9,329 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.48/- கோடி மதிப்பீட்டிலும், 2023-2024-ஆம் ஆண்டு 6,028 மாணவர்களுக்கும், 6,757 மாணவியர்களுக்கும் என 12,785 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.17/- கோடி மதிப்பீட்டிலும், 2024-2025-ஆம் ஆண்டு 8,237 மாணவர்களுக்கும், 9,393 மாணவியர்களுக்கும் என 17,630 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.8.50/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 54,830 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.26.82/- கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் (2025-2025) 7,604 மாணவர்களுக்கும், 9,322 மாணவியர்களுக்கும் என மொத்தம் 16,936 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.28/- கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் கட்டமாக 11-ஆம் வகுப்பு பயிலும் 145 மாணவர்களுக்கு ரூ.6,34,375/- மதிப்பீட்டிலும் மற்றும் 7 மாணவியர்களுக்கு ரூ.29,750/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 152 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,64,125/- மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்த கட்டங்களாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மீதமுள்ள மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10,11,12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கும் மற்றும் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியை கண்டு களிப்பதற்கு ”கல்விச் சுற்றுலா” அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதல்படியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 6800 நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடி மதிப்பீட்டில் புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 822 முழு நேர கடைகளும், 478 பகுதி நேரக் கடைகளும், 122 நகரும் நியாய விலைக் கடைகளும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 140 முழு நேர கடைகளும், 119 பகுதி நேரக் கடைகளும், 6 நகரும் நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 107 நியாய விலைக் கடைகளும், 4 நகரும் நியாய விலைக் கடைகளும் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கிளைகள் 2 எண்ணிக்கையிலும், புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பதிவு அலுவலகக் கட்டடம் 13 எண்ணிக்கையிலும் கட்டப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்கள் அனைவரும் பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் சிரத்தையுடன் தங்களுடைய கல்விக்காக உழைத்து வருவதை எண்ணி நன்றாக படித்து வருங்காலத்தில் ஏதாவதொரு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்க வேண்டும். மேலும், தங்களுடைய குறிக்கோளானது வானளாவிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதை நோக்கி முன்னேறி செல்ல முடியும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மா.பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபு பாண்டியன், பழனி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் திரு.செந்தில்வேல் பாண்டியன், ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.இல.மணிமொழி அவர்கள் ஆகியோர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.