Close

Jamabhandhi Natham-1433 Fasali – 2nd day

Publish Date : 20/06/2024
.

செ.வெ.எண்:-35/2024

நாள்:-19.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இரண்டாவது நாளாக வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இரண்டாம் நாளாக இன்று(19.06.2024) வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 18.06.2024 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களைப் பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நத்தம் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் 18.06.2024 அன்று தொடங்கியது. ரெட்டியபட்டி குறுவட்டத்திற்கு உட்பட்ட முளையூர், புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி தொகுப்பு, இடையபட்டி, சாத்தம்பாடி, லிங்கவாடி, புதூர், ரெட்டியபட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக இன்று(19.06.2024) செந்துறை குறு வட்டத்திற்கு உட்பட்ட சிரங்காட்டுபட்டி, சேத்தூர், சிறுகுடி, கோட்டையூர் , பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி, செந்துறை உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.. பொதுமக்களின் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் 22 நபர்களுக்க பட்டா, 4 நபர்களுக்கு பட்டா உட்பிரிவு ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து 20.06.2024 அன்று நத்தம் குறு வட்டத்திற்கு உட்பட்ட சமுத்திராபட்டி, ஊராளிபட்டி, பூதகுடி, பண்ணுவார்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி, பன்னியாமலை, நடுமண்டலம், வேலம்பட்டி, நத்தம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது, என வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் திருமதி சுகந்தி மற்றும் தொடர்புடைய பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.