Close

Monday Grievance Day Petition

Publish Date : 12/08/2025
.

செ.வெ.எண்:-44/2025

நாள்:-11.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(11.08.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 250 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 2024-2025 ஆம் ஆண்டு மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 மீனவர்களுக்கு மீன்பிடி பரிசல்கள் மற்றும் 2025-26 ஆம் ஆண்டிற்கு மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்குதல் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பயனாளிகளுக்கு 5.15 ஹெக்டர் அளவில் இருப்பு செய்திட மீன்குஞ்சுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மேற்கு வட்டம், சில்வார்பட்டி கிராமம், கிராம உதவியாளராக பணியாற்றி 10.07.2015 அன்று பணி இடையே காலமான திரு.மு.பழனிச்சாமி என்பவரின் வாரிசு தாரரும் மகளுமாகிய திருமதி முருகேஸ்வரி என்பவருக்கு கருணை அடிப்படையில் திண்டுக்கல் மேற்கு வட்டம், கே.புது‌க்கோ‌ட்டை கிராமத்தில் கிராம உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டதையடுத்து அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.