Close

Monday Grievance Day Petition

Publish Date : 18/11/2025
.

செ.வெ.எண்:-73/2025

நாள்:-17.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.11.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 284 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்த்தல் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.3,14,000 மதிப்பீட்டிலும், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தல் திட்டத்தின் மூலம் 2 பயனாளிக்கு தலா ரூ.1,20,000 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.2,40,000 மதிப்பீட்டிலும், புதிய மீன் வளர்ப்புப் பண்ணை அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.1,10,000 மதிப்பீட்டில் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.6,64,000 மதிப்பீட்டிலான மானியத்தொகையினையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.4,10,000 மதிப்பீட்டில் விபத்து மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகையினையும், 5 பயனாளிகளுக்கு ரூ.2,65,000 மதிப்பீட்டில் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகையினையும் மற்றும் 14 பயனாளிகளுக்கு ரூ.2.80 இலட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையினையும், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.3,25,000 மதிப்பீட்டில் ஆட்டோ நலத்திட்ட உதவித்தொகையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.செல்வன், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் திரு.ராஜ்குமார் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.