Close

Tamilnadu Houseing Board

Publish Date : 18/08/2025

செ.வெ.எண்:-69/2025

நாள்:-16.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அபராத வட்டி தள்ளுபடி அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம்) (ம) வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்று 31.03.2015-ற்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும் தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசாணை எண்-116, நாள்: 04.08.2025-ன்படி வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, தவணைத் தொகை சரிவர செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் இந்த சலுகையினை பயன்படுத்தி வரும் 31.03.2026-ற்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்தினை இறுதி விலை வித்தியாச தொகயைில், ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய வட்டி தள்ளுபடி சலுகையின் சிறப்பம்சங்களும் உள்ளது.

கடந்த 31.03.2015-ற்கு முன்னர் தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை அறிந்து ஒரே தவணையில் தொகையினை செலுத்தி மேற்கண்ட வட்டி சலுகை திட்டத்தின் மூலம் பயன்பெற்று கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியார் (ம) நிர்வாக அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.