Close

TNPSC Exam Inspection

Publish Date : 16/07/2024
.

செ.வெ.எண்:-34/2024

நாள்:-13.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1-பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வினை 4229 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு (தொகுதி 1 பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(13.07.2024) பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 1 (தொகுதி 1 பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வு இன்று (13.07.2024) நடைபெறுகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 6200 நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 4229 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 1971 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை 68 சதவீத நபர்கள் தேர்வு எழுதினார்கள். அதற்காக மொத்தம் 6 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, 23 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தன என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.