Town and Country Planning – Education Institution Building
செ.வெ.எண்:-15/2024
நாள்:-07.08.2024
திண்டுக்கல் மாவட்டம்
அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை எண் 76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்(ந(3))துறை நாள் 14.06.2018-ல் மாற்றமின்றி அரசு கடிதம் (நிலை) எண் 122/நப4(1)/2024, நாள்:25.06.2024-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில் அரசு கடிதம் எண் 15535/நவ4(3)/2019, நாள்:18.02.2020-ல் குறிப்பிட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த இறுதி வாய்ப்பை பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.