Close

ELECTION

Publish Date : 01/12/2025
.

செ.வெ.எண்:-115/2025

நாள்: 28.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீள பெறப்படும் முகாம் பணிகளை – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீள பெறப்படும் முகாம் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மற்றும் பள்ளபட்டி ஊராட்சி, நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடியனூத்து ஊராட்சி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாலையகவுண்டன்பட்டி, சிலுக்குவார்பட்டி ஊராட்சி, கணவாய்பட்டி ஊராட்சி மற்றும் வத்தலக்குண்டு பேரூராட்சி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட க.சிங்காரக்கோட்டை மற்றும் வக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீள பெறப்படும் முகாம் பணிகளையும் மற்றும் கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) பதிவேற்றம் செய்யும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரிய பூத்தாம்பட்டியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப அவர்கள் இப்பேரணியை தொடங்கி வைத்து, வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) பெற்றுக் கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 98.22% வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கபப்ட்ட கணக்கெடுப்பு படிவங்களில் 73.11% படிவங்கள் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டுள்ளது. மீதமுள்ளவைகளை பெறுவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் எதிர்வரும் 04.12.2025 வரையில் நடைபெறவுள்ளது. மேற்படி படிவங்களை திரும்ப வழங்கிடுமாறு வாக்காளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீள பெறப்படும் பணிகளை இறுதி நாள் வரையில் காத்திருக்காமல் விரைவில் படிவத்தினை பெற்று வழங்குமாறு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வாக்காளர்கள் இறுதி நாள் வரையில் காத்திருக்காமல் விரைவில் வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. கணக்கெடுப்பு (Enumeration Form) படிவங்கள் திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் என்பதால் அனைத்து வாக்காளர்களும் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை தங்களது வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் உடன் ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகளின்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமார், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், வேடசந்தூர் வட்டாட்சியர் திருமதி.மணிமொழி மற்றும் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.