Close

Election – Press Release

Publish Date : 06/01/2026

செ.வெ.எண்:-05/2026

நாள்: 04.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல்,நீக்கம் முகவரி மாற்றம்,திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2301 வாக்குச்சாவடி மையங்களிலும் 03.01.2026 (சனி) மற்றும் 04.01.2026 (ஞாயிறு) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பார்வையாளராக (Electoral Roll Observer) நியமிக்கப்பட்டுள்ள திரு.எம்.கோவிந்தராவ்.இ.ஆ.ப. அவர்களால் இன்று (04.01.2026) 133-வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடமதுரை கிராமம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள் 290,291,292,293,294,295 மற்றும் தங்கம்மாபட்டி கிராமம்,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள். 235,236 ஆகியவைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்.,இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்களுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது வாக்காளர்களிடம் புதிய வாக்காளர்களை 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல்,நீக்கம் முகவரி மாற்றம், முகவரி திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

மேலும்,வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் நேரடியாகவும், இணையவழியின் (Online) மூலமாகவும் எதிர் வரும் 18.01.2026 வரை தொடர்ந்து விண்ணப்பம் செய்து கொள்ளலாம் எனவும், இணையவழியின் (Online) மூலமாக விண்ணப்பம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலியினை பயன்படுத்தி விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திண்டுக்கல்.