Close

Collector Inpection – Election

Publish Date : 01/12/2025
.

செ.வெ.எண்:-116/2025

நாள்: 29.11.2025

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 99% வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களில் மீதமுள்ளவைகளை பெறுவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து எதிர் வரும் 04.12.2025 வரை தொடர்;ந்து பெறப்படும். எந்த ஒரு தகுதியான வாக்காளர்களும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதே இச்சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் ஆகும்.

எனவே, கணக்கெடுப்பு படிவங்கள் கொடுக்கப்படாத வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தவறாது ஒப்புடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.