Close

Press Release

Filter:
No Image

DBCMWO – DNC Welfare Board

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-44/2024 நாள்:-21.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், திரு. இராசா.அருண்மொழி அவர்களைத் துணைத்தலைவராகக் கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, […]

More
.

DSWO – Transgender Special Camp

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-45/2024 நாள்:-21.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.06.2024) நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழக அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]

More
.

Paliyar Tribes Welfare – Meeting

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-43/2024 நாள்:-20.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பளியர் இன மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பளியர் இன மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.06.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட […]

More
No Image

DDAWO-EIC AUTISM

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-42/2024 நாள்:-20.06.2024 திண்டுக்கல் மாவட்டம் புற உலக சிந்தனையற்ற பயிற்சி மையம் செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-2025-ஆம் நிதி ஆண்டிற்கு புற உலக சிந்தனையற்ற ஆரம்ப கால பயிற்சி மையம் (0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்) நடத்த விருப்பமுள்ள, மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016-ல் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்தினை 0-6 வயதுடைய, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி […]

More
.

Jamabhandhi Natham-1433 Fasali – Final day

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-41/2024 நாள்:-20.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு நாளான இன்று(20.06.2024) வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]

More
No Image

Christian Welfare Board- Notification

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-40/2024 நாள்:-20.06.2024v திண்டுக்கல் மாவட்டம்v கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு […]

More
No Image

Employment – Indian Airforce Agniveer

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-39/2024 நாள்:-20.06.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய விமானப்படையால்(INDIAN AIRFORCE) 2024-25-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பில் பனிரெண்டாம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்புகள் கொண்ட கல்வித் தகுதியும், 03.07.2004 முதல் […]

More
.

Ungalai Thedi Ungal Ooril – Collector Inspection(Vedasandur)

Published on: 21/06/2024

செ.வெ.எண்:-38/2024 நாள்:-19.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.06.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வேடசந்துார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

More
No Image

Employment – Private Employment camp – Notification

Published on: 20/06/2024

செ.வெ.எண்:-37/2024 நாள்:-19.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜுன்-2024-ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை […]

More
No Image

DDAWO -Bus pass camp

Published on: 20/06/2024

செ.வெ.எண்:-36/2024 நாள்:-19.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பிக்கவும் மற்றும் புதியதாக வழங்குவதற்கான முகாம் 25.06.2024 மற்றும் 26.06.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கு 2024-2025 ஆம் நிதியாண்டுக்கு பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பித்தும், புதியதாக வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட […]

More
.

Jamabhandhi Natham-1433 Fasali – 2nd day

Published on: 20/06/2024

செ.வெ.எண்:-35/2024 நாள்:-19.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இரண்டாவது நாளாக வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இரண்டாம் நாளாக இன்று(19.06.2024) வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் […]

More
.

Photo Exhibition-Aathoor(Pillaiyarnatham)

Published on: 19/06/2024

செ.வெ.எண்:- 34/2024 நாள்: 18.06.2024 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் […]

More
.

Jamabhandhi Natham-1433 Fasali

Published on: 19/06/2024

செ.வெ.எண்:-33/2024 நாள்:-18.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கியது. நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இன்று(18.06.2024) தொடங்கியது. நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம், வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]

More
No Image

Patta Details online – Tamilnilam App

Published on: 19/06/2024

செ.வெ.எண்:-32/2024 நாள்:-16.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நில அளவைத் தொடர்பான விவரங்களை, இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்“ செயலி மூலம் பார்வையிட்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில், பட்டா மாறுதல் – “தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை (Tamil […]

More
No Image

DSWO – Camp

Published on: 19/06/2024

செ.வெ.எண்:-30/2024 நாள்:-15.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21.06.2024 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழக அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத் தொகை வழங்குதல், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீட்டுத் […]

More
.

The Hon’ble Handloom Textile Minister – MTP – Narikalpatty

Published on: 19/06/2024

செ.வெ.எண்:-29/2024 நாள்: 14.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் நரிக்கல்பட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, 22 பயனாளிகளுக்கு ரூ.50.22 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், துணிநூல் துறை ஆணையர் […]

More
.

The Hon’ble Rural Development – Handloom textile Minister – Chinnalapatty

Published on: 18/06/2024

செ.வெ.எண்:-28/2024 நாள்: 14.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் ஆகியோர் சின்னாளப்பட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, 46 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் ஆகியோர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் […]

More
No Image

TAMCO LOAN – Notification

Published on: 18/06/2024

செ.வெ.எண்:-27/2024 நாள்:-13.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கைவினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த கடன் திட்டங்கள் குடும்ப […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – Scheme Meeting

Published on: 18/06/2024

செ.வெ.எண்:-26/2024 நாள்: 13.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து […]

More
.

The Hon’ble Rural Development Minister – Thadikombu – Rationshop

Published on: 18/06/2024

செ.வெ.எண்:-25/2024 நாள்: 13.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 210 நியாயவிலைக் கடைகளுக்கு கண்கருவிழி பதிவு கருவிகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு நியாயவிலைக்கடையில் இன்று(13.06.2024) நடைபெற்ற விழாவில் 210 நியாயவிலைக் கடைகளுக்கான கண்கருவிழி பதிவு கருவிகளை விற்பனையாளர்களிடம் வழங்கி, கண் கருவிழி ரேகை பதிவு செய்து குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யும் […]

More
No Image

TNREGINET – Guidelines – Notification

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-24/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47AA-ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க […]

More
No Image

Textiles Training

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-23/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும். தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் […]

More
No Image

Bal Puraskar Award

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-21/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் “பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருதுக்கு இணையதளம் வாயிலாக 31.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், “பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) 2025“ (பால் புரஷ்கார் விருது) அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வீர, தீர மற்றும் தன்னலமற்ற செயல்கள் […]

More
.

Against the child labor system -Pledge

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-22/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை(ஜுன் 12-ஆம் தேதி) முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் இன்று(12.06.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் […]

More
.

Mass contact – Sankalpatty

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-20/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.53.94 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் இன்று(12.06.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை […]

More
No Image

DSWO Award – Notification

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-19/2024 நாள்:-11.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, சிறந்த சமூக சேவகர் மற்றும் […]

More
No Image

Apprentice – Automatic Workshop – Notification

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-18/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள 4 கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர்(APPRENTICE) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு 14.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சரளப்பட்டி பிரிவு, அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர்(APPRENTICE) பயிற்சியிடங்கள் நான்கினை நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு அரசு தானியங்கிப் பணிமனையில் 14.06.2024 அன்று காலை 10.00 […]

More
No Image

Natham – Patta online

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-17/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடசந்துார், குஜிலியம்பாறை, திண்டுக்கல் மேற்கு, ஆத்துார், திண்டுக்கல் கிழக்கு, கொடைக்கானல் ஆகிய வட்டங்களில் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” 04.03.2024 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ”நத்தம், […]

More
No Image

Ungalai Thedi Ungal Ooril-Vedasandur

Published on: 14/06/2024

செ.வெ.எண்:-16/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் வேடசந்தூர் வட்டத்தில் 19.06.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் […]

More
.

Ration shop – Inspection

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-14/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பூதிபுரம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட […]

More
.

Adhaar Center Inspection

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-13/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளில் ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் (பழனி சாலையில்) அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின், பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் பதிவை மேம்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு, ஆய்வு […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-15/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் 178 பயனாளிகளுக்கு ரூ. 20,64,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.06.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை […]

More
.

School – collector Inspection

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-12/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் இன்று(10.06.2024) திறக்கப்பட்டுள்ளதையடுத்து திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் எத்தனை மாணவ, மாணவிகள் உள்ளனர், புதிய மாணவர்கள் சேர்க்கை எத்தனை என்பது குறித்து […]

More
.

Animal Husbandry – Camp

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-11/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்(கால் மற்றும் வாய் நோய்) தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,91,700 கால்நடைகள் உள்ளன. கால் மற்றும் வாய்(காணை) […]

More
No Image

Animal Husbandry – Camp – Notification

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-10/2024 நாள்:-09.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை நோய்த்தடுப்பூசிப்பணித்திட்டத்தின்கீழ் ஜந்தாவது சுற்று கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசிப்பணியானது 10.06.2024 அன்று முதல் துவங்கி 21 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மேலும், விடுபட்ட கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி […]

More
.

TNPSC Exam Inspection

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-06/2024 நாள்:-09.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வினை 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.06.2024) […]

More
No Image

Govt. ITI., Dindigul -Admission 2024 (Extension of time)

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-05/2024 நாள்: 08.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 13.06.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் […]

More
No Image

GDP Announcement

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-07/2024 நாள்:-07.06.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் தளர்வு செய்யப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட பொதுமக்களிடம் குறைகளை களைந்திட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் மாவட்ட […]

More
No Image

DSO-Ration Shop – May 2024 – Supply – Notification

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-06/2024 நாள்:-07.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நியாய விலைக் கடைகளில் மே-2024-ஆம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜுன்-2024-ஆம் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நேர்வில், […]

More
No Image

DBCWO-Hostel -2024-25 – Admission

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-05/2024 நாள்:-07.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 28 விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் விடுதிகள் மாணவர்களுக்கு ஒரு விடுதி, […]

More
No Image

TNPSC group 4-Meeting

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-04/2024 நாள்:-07.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்–ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக தலைமை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., […]

More
No Image

Government Arts & Science College – Vedasandur – Counseling – Notification

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-03/2024 நாள்:-06.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் […]

More
.

Court Tree Plantation

Published on: 13/06/2024

செ.வெ.எண்:-02/2024 நாள்:-05.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழா, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி ஏ.முத்துசாராதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழா, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி ஏ.முத்துசாராதா அவர்கள் தலைமையில் இன்று(05.06.2024) நடைபெற்றது. விழாவில், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி […]

More
No Image

Naanmuthalvan – 32,716 Students Benefited

Published on: 05/06/2024

பத்திரிகைச் செய்தி “நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 37,716 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வூதிய திட்டங்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து நல்வாய்ப்புகளையும், உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ என்கிற திட்டம் […]

More
No Image

Employment – TNPSC Coach

Published on: 29/05/2024

செ.வெ.எண்:-31/2024 நாள்:-28.05.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC), தமிழ்நாடு சீருடைப் […]

More
.

All Party Meeting (Counting Center)

Published on: 29/05/2024

செ.வெ.எண்:-29/2024 நாள்:-27.05.2024 திண்டுக்கல் மாவட்டம் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், […]

More
No Image

New India Literacy Programme

Published on: 29/05/2024

செ.வெ.எண்:-28/2024 நாள்:-25.05.2024 திண்டுக்கல் மாவட்டம் எழுத்தறிவு பெறாத நபர்களுக்கு கல்வியறிவு வழங்கிட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத நபர்களைக் கண்டறிந்து கல்வியறிவு வழங்கும் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027” ஐந்தாண்டுத்திட்டமானது கடந்த 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திண்டுக்கல் மாவட்டத்தை 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக […]

More
No Image

Breakfast Scheme – 52,347 Students Benefited

Published on: 29/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்“ வாயிலாக 52,347 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “படிப்பு ஒன்று […]

More
.

New India Literacy Programme Meeting

Published on: 29/05/2024

செ.வெ.எண்:-27/2024 நாள்:-23.05.2024 திண்டுக்கல் மாவட்டம் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027“ செயல்படுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027“ (New India Literacy Programme) செயல்படுத்தல் தொடர்பாக மாவட்ட எழுத்தறிவு முனைப்பு ஆணையக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி […]

More
.

Election Counting Training

Published on: 29/05/2024

செ.வெ.எண்:-26/2024 நாள்:-22.05.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., […]

More