Agri Grievance Day Petition
Published on: 15/07/2024செ.வெ.எண்:-31/2024 நாள்:-12.07.2024 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.07.2024 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் 19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த […]
MoreDSO – Grievance Day Petition – Notification
Published on: 15/07/2024செ.வெ.எண்:-31/2024 நாள்:-12.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழக அரசால் மக்களின் நலன் கருதி பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு […]
MoreHorticulture – Notification
Published on: 15/07/2024செ.வெ.எண்:-28/2024 நாள்:-12.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆண்டில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆண்டில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி […]
MoreJal Shakti Abhiyan – Meeting
Published on: 15/07/2024செ.வெ.எண்:-29/2024 நாள்:-11.07.2024 திண்டுக்கல் மாவட்டம் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மத்திய துணைச் செயலர் திரு.கா.கோபால கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது- […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Makkaludan Muthalvar – Meeting
Published on: 15/07/2024செ.வெ.எண்:-28/2024 நாள்:-11.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், தொப்பம்பட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியில் இன்று(11.07.2024) “மக்களுடன் முதல்வர்“ திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட […]
MoreThe Hon’ble Rural Development Minister – Makkaludan Muthalvar
Published on: 15/07/2024செ.வெ.எண்:-27/2024 நாள்:-11.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை துவக்கி வைத்து 37 பயனாளிகளுக்கு ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் என்.பஞ்சம்பட்டியில் இன்று(11.07.2024) தொடங்கி வைத்து 37 பயனாளிகளுக்கு […]
Moreexweldgl – Sewing machine
Published on: 15/07/2024செ.வெ.எண்:-26/2024 நாள்:-10.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தையல் இயந்திரங்கள் வழங்கிட முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி […]
MoreAD-Mines – Agri Farmers- Notification
Published on: 15/07/2024செ.வெ.எண்:-27/2024 நாள்:-10.07.2024 திண்டுக்கல் மாவட்டம் நீர்நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்துச் செல்ல விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பொறியாளர், நீ.வ.து / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திண்டுக்கல் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள 273 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து திண்டுக்கல் மாவட்ட […]
MoreMakkaludan Mudhalvar Camp
Published on: 15/07/2024செ.வெ.எண்:-25/2024 நாள்:-10.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில் வருவாய்துறை சம்மந்தமான கோரிக்கை மனுக்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” (ஊரகம்) என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 11.07.2024 அன்று துவக்கப்பட உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” (ஊரகம்) சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில், 306 […]
MoreMass Contact
Published on: 13/07/2024செ.வெ.எண்:-24/2024 நாள்:-10.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 157 பயனாளிகளுக்கு ரூ.9.69 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடி கிராமத்தில் இன்று(10.07.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 157 பயனாளிகளுக்கு ரூ.9.69 […]
MoreWorld Population Day 2024 – meeting
Published on: 13/07/2024செ.வெ.எண்:-23/2024 நாள்:-09.07.2024 திண்டுக்கல் மாவட்டம் உலக மக்கள் தொகை தினம்-2024 தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக மக்கள் தொகை தினம்-2024 தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(09.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 11-ம் தேதி உலக மக்கள் தொகை […]
MoreMakkaludan Mudhalvar Camp
Published on: 13/07/2024செ.வெ.எண்:-22/2024 நாள்:-09.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 11.07.2024 முதல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 11.07.2024 அன்று துவக்கப்பட உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வருகிற 11.07.2024 முதல் 23.08.2024 […]
MoreKalaignarin Kanavu Illam – meeting
Published on: 13/07/2024செ.வெ.எண்:-20/2024 நாள்:-08.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க […]
MoreNSNOP-schools development
Published on: 13/07/2024செ.வெ.எண்:-19/2024 நாள்:-08.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ திட்டத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ திட்டம் மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(08.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு […]
MoreMonday Grievance Day Petition
Published on: 13/07/2024செ.வெ.எண்:-18/2024 நாள்:-08.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 58 பயனாளிகளுக்கு ரூ.27.35 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.07.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]
MoreAgri enterpurner & Nammalwar Award
Published on: 13/07/2024செ.வெ.எண்:-17/2024 நாள்:-06.07.2024 திண்டுக்கல் மாவட்டம் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் “நம்மாழ்வார் விருது” பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான “நம்மாழ்வார் விருது” 2023-24-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2024-25ஆம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று 2024-25ஆம் ஆண்டு […]
MoreEmployment – Unemployed Person – Notification
Published on: 11/07/2024செ.வெ.எண்:-16/2024 நாள்:-06.07.2024 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்து விட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் […]
MoreDistrict AD Welfare Office – Teacher Recruitment – Notification
Published on: 11/07/2024செ.வெ.எண்:-15/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில், தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, நல்லுார்காடுவளவு பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம், தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. இந்த […]
MoreAgri PMFBY – Kharif, Special & Rabi-meet
Published on: 11/07/2024செ.வெ.எண்:-14/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- […]
MoreTourism-Palani to Tirupathi Bus
Published on: 11/07/2024செ.வெ.எண்:-13/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணத்திற்கு இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான […]
MoreDBCWO – Church Renovation
Published on: 10/07/2024செ.வெ.எண்:-12/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப […]
MoreAgriculture – SADS Scheme
Published on: 10/07/2024செ.வெ.எண்:-11/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் ‘’இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்’’ ஆக்குதல் திட்டத்தில் பயனடைய விரும்பும் இளைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவித்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் ‘’இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்’’ ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் பட்டதாரி இளைஞர்கள் தங்களது மூலதனத்தில் பிரதம மந்திரி […]
MoreTNPSC group 1- Meeting
Published on: 10/07/2024செ.வெ.எண்:-10/2024 நாள்:-04.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1-பணிகள்) முதல்நிலை போட்டித்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1- பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை […]
MoreDDAWO-MI Home
Published on: 10/07/2024செ.வெ.எண்:-09/2024 நாள்:-04.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இல்லங்களில் சேர்த்து பராமரிக்க முன்வரும் தொண்டு நிறுவனங்கள், புதியதாக மன நல காப்பகம் துவங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழக அரசின் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மன நல காப்பகம் நடத்த […]
MoreAnimal husbandry -Small Scale Native Chicken Scheme
Published on: 10/07/2024செ.வெ.எண்:-08/2024 நாள்:-04.07.2024 திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிபண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், 2024-25-ஆம் ஆண்டிற்கு “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழிபண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும், திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு, நாட்டுக்கோழி […]
MoreAgri Grievance – Dindigul RDO office
Published on: 10/07/2024செ.வெ.எண்:-07/2024 நாள்:-03.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 08.07.2024 அன்று வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 08.07.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 12 மணி வரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண் சார்ந்த சங்கங்கள் […]
MoreDSO – PDS – June 2024 – Supply – Notification
Published on: 09/07/2024செ.வெ.எண்:-06/2024 நாள்:-03.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பொதுவிநியோகத் திட்டத்தில் ஜுன்-2024-ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்,- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நேர்வில், ஜுன்-2024-ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் […]
MoreAnimal Husbandry – Notification
Published on: 09/07/2024செ.வெ.எண்:-04/2024 நாள்:-02.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவற்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க, பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 250 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும், நீர்ப்பாசன வசதியுடன் கூடிய பழத்தோட்டம் மற்றும் கால்நடைகள் […]
MoreGovt ITI Admission – Notification
Published on: 09/07/2024செ.வெ.எண்:-03/2024 நாள்:-02.07.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), திண்டுக்கல்(குள்ளனம்பட்டி) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை முடிவுபெற்ற நிலையில், ஐ.டிஐ.-ல் சேர விரும்புவோர்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 01.07.2024 முதல் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி […]
MoreMonday Grievance Day Petition
Published on: 09/07/2024செ.வெ.எண்:-02/2024 நாள்:-01.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 20 பயனாளிகளுக்கு ரூ.1.21 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(01.07.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]
MoreEmp – TNPSC Coaching Center
Published on: 03/07/2024செ.வெ.எண்:-01/2024 நாள்:-01.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு தொகுதி 2 மற்றும் தொகுதி 2ஏ-க்கான போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 03.07.2024 அன்று முதல் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். F திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் […]
MorePensioner Grievance
Published on: 03/07/2024செ.வெ.எண்:-66/2024 நாள்:-30.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.07.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சென்னை ஓய்வூதிய இயக்குநர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட […]
MoreTamilvalarchi -TAMILNADU NAAL
Published on: 03/07/2024செ.வெ.எண்:-65/2024 நாள்:-29.06.2024 திண்டுக்கல் மாவட்டம் “தமிழ்நாடு நாள்“ தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 அன்று நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினையே “தமிழ்நாடு நாள்” என கொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967-ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் […]
MoreAgri Grievance Day Petition
Published on: 03/07/2024செ.வெ.எண்:64/2024 நாள்: 28.06.2024 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.06.2024) நடைபெற்றது.v இக்கூட்டத்தில், விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், பட்டா கோரி விண்ணப்பம் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும். இட […]
MoreTABCEDCO Loan
Published on: 02/07/2024செ.வெ.எண்:-63/2024 நாள்:-28.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் […]
MoreKalangar Kanavu Illam Scheme – Collector inspection
Published on: 02/07/2024செ.வெ.எண்:-61/2024 நாள்:-27.06.2024 திண்டுக்கல் மாவட்டம் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்ட பயனாளிகள் தேர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில், “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் பயனாளிகள் தேர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சி, சக்கிலியன்கொடை கிராமத்தில் இன்று(27.06.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- […]
MoreGrama saba 02.07.2024 meeting
Published on: 02/07/2024செ.வெ.எண்:-60/2024 நாள்:-27.06.2024 திண்டுக்கல் மாவட்டம் ”கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” மற்றும் “கலைஞரின் கனவு இல்லம்“ 2024-2025 செயல்படுத்திடும் பொருட்டு 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் 02.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் ”கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” மற்றும் “கலைஞரின் கனவு இல்லம்“ 2024-2025 செயல்படுத்திடும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் […]
MoreDBCWO – Scholarship – Meeting
Published on: 02/07/2024செ.வெ.எண்:-58/2024 நாள்:-26.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகையை மாணவியர் வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை மாணவியர் வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.06.2024)) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் […]
MoreTN – REGINET – Guidelines – Notification
Published on: 02/07/2024செ.வெ.எண்:-59/2024 நாள்:-26.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலங்களின் மறுசீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு செயல்படுத்துதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நிலங்களின் மறுசீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு செயல்படுத்துதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.06.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- நிலங்களின் […]
MoreDRUG free Awareness Rally
Published on: 02/07/2024செ.வெ.எண்:-57/2024 நாள்:-26.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று(26.06.2024) நடைபெற்றது. பேரணியை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலால் மற்றும் மதுவிலக்கு உதவி ஆணையர் திரு.இரா.பால்பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்துகொண்ட சாரணியர் மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் “மரணத்தை பரிசளிக்கும் போதை பொருள் வேண்டாம்”, […]
MorePhoto Exhibition-Nilakottai-Sivayanapuram
Published on: 02/07/2024செ.வெ.எண்:- 56/2024 நாள்: 25.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் […]
MorePaliyar Tribes Welfare (Camp) – 2nd Day
Published on: 02/07/2024செ.வெ.எண்:-55/2024 நாள்:-25.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் பளியர் இன மக்கள், அரசின் நலத்திட்டங்களை பெற்றிடும் வகையில், பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக இன்று(25.06.2024) பழனி வட்டம், பாலசமுத்திரத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, […]
MoreDifferentially Abled Person – Grievance Day Petition
Published on: 02/07/2024செ.வெ.எண்: 54/2024 நாள்: 25.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டம், ஆத்துார் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் ஆய்வுக் கூட்டம் 29.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டம், ஆத்துார் வட்டம், ஆத்துார் கிராமத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் ஆய்வுக்கூட்டம் 29.06.2024 அன்று முற்பகல் 10.30 […]
Moreliquor illegal sale – Meeting
Published on: 02/07/2024செ.வெ.எண்:-53/2024 நாள்:-24.06.2024 திண்டுக்கல் மாவட்டம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டத்தினை ஒழிப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்தறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டத்தினை ஒழிப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்தறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் […]
MorePaliyar Tribes Welfare (Camp)
Published on: 02/07/2024செ.வெ.எண்:-52/2024 நாள்:-24.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து 28 கிராமங்களுக்கு நேரடியாக சென்று தரவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் இன்று(24.06.2024) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 4 கிராமங்களில் 42 […]
MoreMonday Grievance Day Petition
Published on: 02/07/2024செ.வெ.எண்:-51/2024 நாள்:-24.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 11 பயனாளிகளுக்கு ரூ.10.11 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.06.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]
MorePadma Award – Notification
Published on: 02/07/2024செ.வெ.எண்:-49/2024 நாள்:-23.06.2024 திண்டுக்கல் மாவட்டம் ‘பத்ம விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று விருதுகள் வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த, […]
MoreJeevan Raksha Award
Published on: 24/06/2024செ.வெ.எண்:-48/2024 நாள்:-22.06.2024 திண்டுக்கல் மாவட்டம் ”ஜீவன் ரக் ஷா விருது ” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் வீரத்துடனும், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ”ஜீவன் ரக் ஷா விருது” என்ற பெயரில் சர்வோதம் ஜீவன் ரக் ஷா விருது, […]
MoreFisheries and Fishermen Welfare – Schemes
Published on: 24/06/2024செ.வெ.எண்:-47/2024 நாள்:-22.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற்று மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் […]
Moreliquor illegal sale
Published on: 24/06/2024செ.வெ.எண்:-46/2024 நாள்:-21.06.2024 திண்டுக்கல் மாவட்டம் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டம் தடுப்பு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.06.2024) நடைபெற்றது. […]
More