Close

Press Release

Filter:
No Image

District AD Welfare Office – Teacher Recruitment – Notification

Published on: 11/07/2024

செ.வெ.எண்:-15/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில், தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, நல்லுார்காடுவளவு பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம், தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. இந்த […]

More
.

Agri PMFBY – Kharif, Special & Rabi-meet

Published on: 11/07/2024

செ.வெ.எண்:-14/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- […]

More
No Image

Tourism-Palani to Tirupathi Bus

Published on: 11/07/2024

செ.வெ.எண்:-13/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணத்திற்கு இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான […]

More
No Image

DBCWO – Church Renovation

Published on: 10/07/2024

செ.வெ.எண்:-12/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப […]

More
No Image

Agriculture – SADS Scheme

Published on: 10/07/2024

செ.வெ.எண்:-11/2024 நாள்:-05.07.2024 திண்டுக்கல் மாவட்டம் ‘’இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்’’ ஆக்குதல் திட்டத்தில் பயனடைய விரும்பும் இளைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவித்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் ‘’இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்’’ ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் பட்டதாரி இளைஞர்கள் தங்களது மூலதனத்தில் பிரதம மந்திரி […]

More
.

TNPSC group 1- Meeting

Published on: 10/07/2024

செ.வெ.எண்:-10/2024 நாள்:-04.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1-பணிகள்) முதல்நிலை போட்டித்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1- பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை […]

More
No Image

DDAWO-MI Home

Published on: 10/07/2024

செ.வெ.எண்:-09/2024 நாள்:-04.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இல்லங்களில் சேர்த்து பராமரிக்க முன்வரும் தொண்டு நிறுவனங்கள், புதியதாக மன நல காப்பகம் துவங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழக அரசின் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மன நல காப்பகம் நடத்த […]

More
No Image

Animal husbandry -Small Scale Native Chicken Scheme

Published on: 10/07/2024

செ.வெ.எண்:-08/2024 நாள்:-04.07.2024 திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிபண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், 2024-25-ஆம் ஆண்டிற்கு “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழிபண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும், திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு, நாட்டுக்கோழி […]

More
No Image

Agri Grievance – Dindigul RDO office

Published on: 10/07/2024

செ.வெ.எண்:-07/2024 நாள்:-03.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 08.07.2024 அன்று வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 08.07.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 12 மணி வரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண் சார்ந்த சங்கங்கள் […]

More
No Image

DSO – PDS – June 2024 – Supply – Notification

Published on: 09/07/2024

செ.வெ.எண்:-06/2024 நாள்:-03.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பொதுவிநியோகத் திட்டத்தில் ஜுன்-2024-ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்,- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நேர்வில், ஜுன்-2024-ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் […]

More
No Image

Animal Husbandry – Notification

Published on: 09/07/2024

செ.வெ.எண்:-04/2024 நாள்:-02.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவற்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க, பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 250 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும், நீர்ப்பாசன வசதியுடன் கூடிய பழத்தோட்டம் மற்றும் கால்நடைகள் […]

More
No Image

Govt ITI Admission – Notification

Published on: 09/07/2024

செ.வெ.எண்:-03/2024 நாள்:-02.07.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), திண்டுக்கல்(குள்ளனம்பட்டி) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை முடிவுபெற்ற நிலையில், ஐ.டிஐ.-ல் சேர விரும்புவோர்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 01.07.2024 முதல் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 09/07/2024

செ.வெ.எண்:-02/2024 நாள்:-01.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 20 பயனாளிகளுக்கு ரூ.1.21 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(01.07.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]

More
No Image

Emp – TNPSC Coaching Center

Published on: 03/07/2024

செ.வெ.எண்:-01/2024 நாள்:-01.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு தொகுதி 2 மற்றும் தொகுதி 2ஏ-க்கான போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 03.07.2024 அன்று முதல் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். F திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் […]

More
No Image

Pensioner Grievance

Published on: 03/07/2024

செ.வெ.எண்:-66/2024 நாள்:-30.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.07.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சென்னை ஓய்வூதிய இயக்குநர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட […]

More
No Image

Tamilvalarchi -TAMILNADU NAAL

Published on: 03/07/2024

செ.வெ.எண்:-65/2024 நாள்:-29.06.2024 திண்டுக்கல் மாவட்டம் “தமிழ்நாடு நாள்“ தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 அன்று நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினையே “தமிழ்நாடு நாள்” என கொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967-ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் […]

More
.

Agri Grievance Day Petition

Published on: 03/07/2024

செ.வெ.எண்:64/2024 நாள்: 28.06.2024 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.06.2024) நடைபெற்றது.v இக்கூட்டத்தில், விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், பட்டா கோரி விண்ணப்பம் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும். இட […]

More
No Image

TABCEDCO Loan

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-63/2024 நாள்:-28.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் […]

More
.

Kalangar Kanavu Illam Scheme – Collector inspection

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-61/2024 நாள்:-27.06.2024 திண்டுக்கல் மாவட்டம் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்ட பயனாளிகள் தேர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில், “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் பயனாளிகள் தேர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சி, சக்கிலியன்கொடை கிராமத்தில் இன்று(27.06.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- […]

More
No Image

Grama saba 02.07.2024 meeting

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-60/2024 நாள்:-27.06.2024 திண்டுக்கல் மாவட்டம் ”கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” மற்றும் “கலைஞரின் கனவு இல்லம்“ 2024-2025 செயல்படுத்திடும் பொருட்டு 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் 02.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் ”கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” மற்றும் “கலைஞரின் கனவு இல்லம்“ 2024-2025 செயல்படுத்திடும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் […]

More
.

DBCWO – Scholarship – Meeting

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-58/2024 நாள்:-26.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகையை மாணவியர் வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை மாணவியர் வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.06.2024)) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் […]

More
.

TN – REGINET – Guidelines – Notification

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-59/2024 நாள்:-26.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலங்களின் மறுசீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு செயல்படுத்துதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நிலங்களின் மறுசீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு செயல்படுத்துதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.06.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- நிலங்களின் […]

More
.

DRUG free Awareness Rally

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-57/2024 நாள்:-26.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று(26.06.2024) நடைபெற்றது. பேரணியை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலால் மற்றும் மதுவிலக்கு உதவி ஆணையர் திரு.இரா.பால்பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்துகொண்ட சாரணியர் மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் “மரணத்தை பரிசளிக்கும் போதை பொருள் வேண்டாம்”, […]

More
.

Photo Exhibition-Nilakottai-Sivayanapuram

Published on: 02/07/2024

செ.வெ.எண்:- 56/2024 நாள்: 25.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் […]

More
.

Paliyar Tribes Welfare (Camp) – 2nd Day

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-55/2024 நாள்:-25.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் பளியர் இன மக்கள், அரசின் நலத்திட்டங்களை பெற்றிடும் வகையில், பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக இன்று(25.06.2024) பழனி வட்டம், பாலசமுத்திரத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, […]

More
No Image

Differentially Abled Person – Grievance Day Petition

Published on: 02/07/2024

செ.வெ.எண்: 54/2024 நாள்: 25.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டம், ஆத்துார் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் ஆய்வுக் கூட்டம் 29.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டம், ஆத்துார் வட்டம், ஆத்துார் கிராமத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் ஆய்வுக்கூட்டம் 29.06.2024 அன்று முற்பகல் 10.30 […]

More
.

liquor illegal sale – Meeting

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-53/2024 நாள்:-24.06.2024 திண்டுக்கல் மாவட்டம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டத்தினை ஒழிப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்தறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டத்தினை ஒழிப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்தறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் […]

More
.

Paliyar Tribes Welfare (Camp)

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-52/2024 நாள்:-24.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து 28 கிராமங்களுக்கு நேரடியாக சென்று தரவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் இன்று(24.06.2024) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 4 கிராமங்களில் 42 […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-51/2024 நாள்:-24.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 11 பயனாளிகளுக்கு ரூ.10.11 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.06.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]

More
No Image

Padma Award – Notification

Published on: 02/07/2024

செ.வெ.எண்:-49/2024 நாள்:-23.06.2024 திண்டுக்கல் மாவட்டம் ‘பத்ம விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று விருதுகள் வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த, […]

More
No Image

Jeevan Raksha Award

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-48/2024 நாள்:-22.06.2024 திண்டுக்கல் மாவட்டம் ”ஜீவன் ரக் ஷா விருது ” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் வீரத்துடனும், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ”ஜீவன் ரக் ஷா விருது” என்ற பெயரில் சர்வோதம் ஜீவன் ரக் ஷா விருது, […]

More
No Image

Fisheries and Fishermen Welfare – Schemes

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-47/2024 நாள்:-22.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற்று மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் […]

More
.

liquor illegal sale

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-46/2024 நாள்:-21.06.2024 திண்டுக்கல் மாவட்டம் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டம் தடுப்பு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.06.2024) நடைபெற்றது. […]

More
No Image

DBCMWO – DNC Welfare Board

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-44/2024 நாள்:-21.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், திரு. இராசா.அருண்மொழி அவர்களைத் துணைத்தலைவராகக் கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, […]

More
.

DSWO – Transgender Special Camp

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-45/2024 நாள்:-21.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.06.2024) நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழக அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]

More
.

Paliyar Tribes Welfare – Meeting

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-43/2024 நாள்:-20.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பளியர் இன மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பளியர் இன மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.06.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட […]

More
No Image

DDAWO-EIC AUTISM

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-42/2024 நாள்:-20.06.2024 திண்டுக்கல் மாவட்டம் புற உலக சிந்தனையற்ற பயிற்சி மையம் செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-2025-ஆம் நிதி ஆண்டிற்கு புற உலக சிந்தனையற்ற ஆரம்ப கால பயிற்சி மையம் (0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்) நடத்த விருப்பமுள்ள, மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016-ல் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்தினை 0-6 வயதுடைய, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி […]

More
.

Jamabhandhi Natham-1433 Fasali – Final day

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-41/2024 நாள்:-20.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு நாளான இன்று(20.06.2024) வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]

More
No Image

Christian Welfare Board- Notification

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-40/2024 நாள்:-20.06.2024v திண்டுக்கல் மாவட்டம்v கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு […]

More
No Image

Employment – Indian Airforce Agniveer

Published on: 24/06/2024

செ.வெ.எண்:-39/2024 நாள்:-20.06.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய விமானப்படையால்(INDIAN AIRFORCE) 2024-25-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பில் பனிரெண்டாம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்புகள் கொண்ட கல்வித் தகுதியும், 03.07.2004 முதல் […]

More
.

Ungalai Thedi Ungal Ooril – Collector Inspection(Vedasandur)

Published on: 21/06/2024

செ.வெ.எண்:-38/2024 நாள்:-19.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.06.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வேடசந்துார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

More
No Image

Employment – Private Employment camp – Notification

Published on: 20/06/2024

செ.வெ.எண்:-37/2024 நாள்:-19.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜுன்-2024-ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை […]

More
No Image

DDAWO -Bus pass camp

Published on: 20/06/2024

செ.வெ.எண்:-36/2024 நாள்:-19.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பிக்கவும் மற்றும் புதியதாக வழங்குவதற்கான முகாம் 25.06.2024 மற்றும் 26.06.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கு 2024-2025 ஆம் நிதியாண்டுக்கு பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பித்தும், புதியதாக வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட […]

More
.

Jamabhandhi Natham-1433 Fasali – 2nd day

Published on: 20/06/2024

செ.வெ.எண்:-35/2024 நாள்:-19.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இரண்டாவது நாளாக வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இரண்டாம் நாளாக இன்று(19.06.2024) வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் […]

More
.

Photo Exhibition-Aathoor(Pillaiyarnatham)

Published on: 19/06/2024

செ.வெ.எண்:- 34/2024 நாள்: 18.06.2024 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் […]

More
.

Jamabhandhi Natham-1433 Fasali

Published on: 19/06/2024

செ.வெ.எண்:-33/2024 நாள்:-18.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கியது. நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இன்று(18.06.2024) தொடங்கியது. நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம், வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]

More
No Image

Patta Details online – Tamilnilam App

Published on: 19/06/2024

செ.வெ.எண்:-32/2024 நாள்:-16.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நில அளவைத் தொடர்பான விவரங்களை, இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்“ செயலி மூலம் பார்வையிட்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில், பட்டா மாறுதல் – “தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை (Tamil […]

More
No Image

DSWO – Camp

Published on: 19/06/2024

செ.வெ.எண்:-30/2024 நாள்:-15.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21.06.2024 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழக அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத் தொகை வழங்குதல், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீட்டுத் […]

More
.

The Hon’ble Handloom Textile Minister – MTP – Narikalpatty

Published on: 19/06/2024

செ.வெ.எண்:-29/2024 நாள்: 14.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் நரிக்கல்பட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, 22 பயனாளிகளுக்கு ரூ.50.22 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், துணிநூல் துறை ஆணையர் […]

More
.

The Hon’ble Rural Development – Handloom textile Minister – Chinnalapatty

Published on: 18/06/2024

செ.வெ.எண்:-28/2024 நாள்: 14.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் ஆகியோர் சின்னாளப்பட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, 46 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் ஆகியோர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் […]

More