Close

Press Release

Filter:
No Image

Vidiyal Payanam Free Bus

Published on: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “விடியல் பயணத் திட்டம்“ வாயிலாக 13,17,76,901 பயணங்கள் மூலம் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர். தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டமான “விடியல் பயணத் திட்டம்“ பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. விடியல் பயணத் திட்டத்தின்படி, 2021-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் […]

More
No Image

Scholarship – Notification

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-25/2024 நாள்:-21.05.2024 திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் மாணாக்கர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பி.எச்.டி.(Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் பழங்குடியினர் மாணாக்கர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பி.எச்.டி.(Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme […]

More
.

TNPSC- Examination – Meeting

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-24/2024 நாள்:-21.05.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 பதவிக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 பதவிக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் […]

More
No Image

Kalaingar Mahalir Urimai Thogai Thittam

Published on: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்“ மூலம் 4,00,433 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.50,000 வைப்பு நிதியாக வழங்கப்படுகிறது. பெண்கள் தங்கள் சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டும், அன்றாட பயணச் செலவுகளை தவிர்த்திடும் வகையில் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம், […]

More
.

Election Counting Personnel Randomization

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-23/2024 நாள்:-20.05.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் […]

More
.

Heavy Rain Alert – Control Room Inspection

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-22/2024 நாள்:-20.05.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் […]

More
No Image

DIC- Annal Ambedkar Business Champions Scheme (AABCS)

Published on: 28/05/2024

பத்திரிகைச் செய்தி அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 48 நபர்களுக்கு மொத்தம் ரூ.4.70 கோடி கடன் தொகை வழங்கப்பட்டதில் மானியமாக ரூ.2.53 கோடி வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. […]

More
No Image

Heavy Rain Alert

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-21/2024 நாள்:-18.05.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(19.05.2024) மற்றும் நாளை மறுநாள்(20.05.2024) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு […]

More
No Image

KODAI FESTIVAL-2024-Flower show

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-20/2024 நாள்:-18.05.2024 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடைவிழாவில் மலர்க்கண்காட்சியை தினமும் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இலவசம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி 17.05.2024 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 26.05.2024-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றன. மலர்க்கண்காட்சியில் மலர்ச்செடிகளை வளர்த்து பூக்கள் […]

More
No Image

Makkalai Thedi Maruthuvam

Published on: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்“ திட்டத்தில் இதுவரை மொத்தம் 5,43,809 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் 05.08.2021 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் […]

More
.

KODAI FESTIVAL-2024 Inauguration

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-19/2024 நாள்:-17.05.2024 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி – வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.05.2024) […]

More
No Image

ITI Admission – Women

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-18/2024 நாள்: 15.05.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) மகளிருக்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) கீழ்க்கண்ட மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. ஐ.டிஐ-ல் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.06.2024-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பிரிவுகள், கல்வித்தகுதி மற்றும் பயிற்சி காலம் […]

More
.

DSO – Ration Shop – New Device Training

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-17/2024 நாள்: 14.05.2024 திண்டுக்கல் மாவட்டம் 643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டு, நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 763 முழுநேர நியாயவிலைக்கடைகள், 272 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 1035 நியாயவிலைக்கடைகள் வாயிலாக 6,88,720 குடும்ப […]

More
No Image

Innuyir Kappom Namai Kakkum 48 Scheme

Published on: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 6311 நபர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே “இன்னுயிர் காப்போம் திட்டம்” ஆகும். […]

More
No Image

Pudhumai Penn Thittam

Published on: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “புதுமைப்பெண்“ திட்டத்தில் 5,117 பயனாளிகளுக்கு ரூ.51.17 இலட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளியோரின் நலன்களில் எந்நாளும் அக்கறைக்கொண்டுள்ள திராவிடமாடல் ஆட்சியின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்திரைப்பதிக்கும் மூன்று ஆண்டுகால ஆட்சி என்றென்றும் தொடரட்டும்…! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். மாண்புமிகு […]

More
No Image

DSO – 643 Ration Shop – New Device Upgrade

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-15/2024 நாள்: 13.05.2024 திண்டுக்கல் மாவட்டம் 643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது. புதிய இயந்திரத்தினை கையாளுவதற்காக நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது விநியோகத்திட்டம், நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்கள் […]

More
No Image

ITI Admission – Notification

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-14/2024 நாள்: 13.05.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி […]

More
No Image

Exwel- Dependent Testimony – Certificate

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-13/2024 நாள்: 10.05.2024 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது. 2024-25-ம் கல்வி ஆண்டில் இச்சான்றினை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திண்டுக்கல் மூலம் நேரடியாக […]

More
No Image

Kodai vizla-2024

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-12/2024 நாள்: 10.05.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா 17.05.2024-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா-2024 ஆகியவை 17.05.2024-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 17.05.2024 முதல் 26.05.2024 வரை […]

More
.

Naan Muthalvan-Kalluri Kanavu

Published on: 28/05/2024

செ.வெ.எண்:-10/2024 நாள்:-09.05.2024 திண்டுக்கல் மாவட்டம் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., முன்னிலையில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை […]

More
No Image

DIC- Award – Notification

Published on: 13/05/2024

செ.வெ.எண்:-09/2024 நாள்:-08.05.2024 திண்டுக்கல் மாவட்டம் மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருது பெற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறந்த தொழில்முனைவோர் உட்பட ஆறு பிரிவுகளில், தமிழ்நாடு அரசு விருது வழங்க உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில், 65,000 மேற்பட்ட […]

More
No Image

Naan Muthalvan – Kalluri Kanavu

Published on: 13/05/2024

செ.வெ.எண்:-08/2024 நாள்:-07.05.2024 திண்டுக்கல் மாவட்டம் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 09.05.2024 அன்று நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., முன்னிலையில் திண்டுக்கல் ஜி.டி.என். […]

More
.

TamilNadu Pollution Control Board – Plastic Manufactory – Seal

Published on: 13/05/2024

செ.வெ.எண்:-07/2024 நாள்:-07.05.2024 திண்டுக்கல் மாவட்டம் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், சாலையூர் என்எஸ் நகர் பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரிய அதிகாரிகள் இன்று(07.05.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை தயாரிக்கும் நிறுவனம் சாலையூர் என்எஸ் நகரில் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த நிறுவனத்திற்கு […]

More
No Image

Kodaikanal ePass – Notification

Published on: 13/05/2024

செ.வெ.எண்:-06/2024 நாள்:-07.05.2024 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் அனைத்து வாகனங்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9442255737 என்ற கைபேசி எண்ணிலோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 […]

More
No Image

Court- Para-Legal Volunteer (PLVs)

Published on: 13/05/2024

செ.வெ.எண்:-05/2024 நாள்:-06.05.2024 திண்டுக்கல் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமதி ஏ.முத்துசாரதா அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். பணி ஓய்வு பெற்றவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞராகப் பதிவு செய்யும் வரை), அரசியல் சார்பற்ற […]

More
No Image

Tool and Print (Diploma course )

Published on: 13/05/2024

செ.வெ.எண்:-04/2024 நாள்:-06.05.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் இயந்திரவியல் பட்டய படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கலில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மூன்றாண்டு இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) பட்டய படிப்பு […]

More
No Image

E-Pass – Kodaikanal – Notification

Published on: 08/05/2024

செ.வெ.எண். 03 நாள் – 05.05.2024 பத்திரிக்கைச் செய்தி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம்ஃ வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும். சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்;கு வருகை தரும் வெளி மாநிலம்ஃ வெளி மாவட்டம் […]

More
No Image

C.M. state Youth award

Published on: 08/05/2024

செ.வெ.எண்:-01/2024 நாள்:-02.05.2024 திண்டுக்கல் மாவட்டம் ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தகவல். சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் […]

More
No Image

Sports Hostel

Published on: 06/05/2024

செ.வெ.எண்:-56/2024 நாள்:-30.04.2024 திண்டுக்கல் மாவட்டம் முதன்மை நிலை விளையாட்டு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள்(CoE), விளையாட்டு விடுதிகள் […]

More
No Image

Summer – Preventive of Heat – Animal Husbandry

Published on: 29/04/2024

செ.வெ.எண்:-55/2024 நாள்:-26.04.2024 திண்டுக்கல் மாவட்டம் கோடைகால வெப்பத்தின் தாக்கத்திலிருந்து கால்நடைகளை பாதுகாத்திட உரிய வழிமுறைகளை பின்பற்றிட கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோடைகால நோயிலிருந்து தங்களது கால்நடைகளை கால்நடை பராமரிப்புத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாத்திடலாம். வெப்பத்தின் தாக்கத்தால் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை பசுக்களில் ஏற்படும் உடல் அயற்சியை தடுப்பதற்கு கறவைப் பசுக்களின் மேய்ச்சல் நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் […]

More
.

Summer – Preventive of Dehydration Related

Published on: 29/04/2024

செ.வெ.எண்:-54/2024 நாள்:-26.04.2024 திண்டுக்கல் மாவட்டம் தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 216 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “அடுத்த 5 நாட்களுக்கு […]

More
.

DADWO – ” Viluthukalai Verkalakka ” – School Student – Campaign

Published on: 23/04/2024

செ.வெ.எண்:-53/2024 நாள்:-22.04.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் “விழுதுகளை வேர்களாக்க“ தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் விடுதியில் தங்கி பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு “விழுதுகளை வேர்களாக்க“ என்ற தலைப்பின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (22.04.2024) […]

More
No Image

Election – EVMs with Ballot Paper

Published on: 15/04/2024

செ.வெ.எண்:-26/2024 நாள்:-09.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களுக்குரிய சின்னங்கள் (Ballot paper) பொருத்தும் பணி 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தேதிகளில் […]

More
No Image

Election- Squad – Seizure and Release

Published on: 15/04/2024

செ.வெ.எண்:-24/2024 நாள்:-08.04.2024 திண்டுக்கல் மாவட்டம் தேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கபணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,31,93,611 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8,77,190 மதிப்பிலான பணம் விடுவிக்கப்பட்டது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் […]

More
.

Election – SVEEP March – Police

Published on: 15/04/2024

செ.வெ.எண்:-23/2024 நாள்:-08.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு அணிவகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு அணிவகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட […]

More
.

Election – voter Awareness -sveep – baloon

Published on: 15/04/2024

செ.வெ.எண்:-22/2024 நாள்:-08.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பறக்கவிட்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை மாவட்ட […]

More
.

Collector Inspection- Preceding officer Training

Published on: 15/04/2024

செ.வெ.எண்:- 22/2024 நாள்:-07.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பழனி அக்சையா அகாடமி மெட்ரிகுலேசன் பள்ளி(சிபிஎஸ்இ), ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஆகிய பயிற்சி வகுப்பு […]

More
No Image

Election – voter information slip – Distribution

Published on: 15/04/2024

செ.வெ.எண்:-20/2024 நாள்:-06.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்காளர் தகவல் சீட்டு 5,82,912 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வரும் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைமுன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 27.03.2024 தேதிப்படி […]

More
.

Election- All party – Press – Meeting

Published on: 19/03/2024

செ.வெ.எண்:-48/2024 நாள்:-17.03.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(17.03.2024) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, […]

More
No Image

Election – flying Squad Team

Published on: 19/03/2024

செ.வெ.எண்:-47/2024 நாள்:-16.03.2024 திண்டுக்கல் மாவட்டம் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான […]

More
No Image

Election – Grievance Day Petition – Announcement

Published on: 19/03/2024

செ.வெ.எண்:-46/2024 நாள்:-16.03.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் […]

More
.

Election – MCC Meeting

Published on: 19/03/2024

செ.வெ.எண்:-45/2024 நாள்:-16.03.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-க்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்து. தேர்தல் நடத்தை விதிகள் இன்று(16.03.2024) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தைவிதிகள் அமல்படுத்துவது குறித்து இன்று(16.03.2024) அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி […]

More